பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகம்

பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகம்

பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகம்

பின்னணி

2024 ஜூன் 18 அன்று 2024 ஆண்டின் 33 ஆம் இலக்க பொது படுகடன் முகாமைத்துவ சட்டம் (PDMA) இயற்றப்பட்டு, 2024 நவம்பர் 25 அன்று அமலுக்கு வந்ததாக பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2024 டிசம்பர் 02 அன்று பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகம் (PDMO) நிறுவப்பட்டு செயல்படத் தொடங்கியது. செயற்பாட்டு ரீதியாக சுயாதீனமான பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்ட கட்டமைப்பை பொது படுகடன் முகாமைத்துவ சட்டம் வழங்குகிறது. இந்த பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகம் அரசாங்க படுகடன் நிர்வாகத்தை வலுப்படுத்தி மையப்படுத்துவதுடன், பொது படுகடன் தொடர்பான தகவல்களைப் பரப்புவதன் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகிறது. அத்துடன் கடன் ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் நீண்டகால நிதி ஆரோக்கியத்திற்கு அவசியமான திறமையான மற்றும் வெளிப்படையான கடன் நடைமுறைகளை செயல்படுத்துவதை உறுதி செய்கிறது.

தூர நேக்கு

"உலக அரங்கில் நம்பகத்தன்மை, செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிற்குப் பெயர் பெற்றதாக பொது படுகடன் முகாமைத்துவத்துக்கு முன்மாதிரியாக இருத்தல்."

பணிக்கூற்று

"இலங்கையின் பொருளாதார மற்றும் அரசிறை நோக்கங்களுடன் இணைந்தவகையில் நிதிச் செலவுகளைக் குறைத்தல்  மற்றும் விவேகமானளவு இடரினை உறுதி செய்தலின் மூலம் அரசாங்கத்தின் கடன் தேவைகளை மூலோபாய ரீதியாக செயல்படுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல்”

 

நோக்கங்கள்

> நிதித் தேவைகளையும் படுகடன் மீள்​கொடுப்பனவு கடப்பாடுகளையும் உரிய கால நேரத்தில் பூர்த்தி செய்தல்.

> விவேகமான அளவிலான இடரிற்கு ஏற்ப நடுத்தர முதல் நீண்ட காலத்திற்கு முடிந்தவரை குறைந்த செலவில் கடன் பெறுதல்.

> உள்நாட்டு கடன் முறிச் சந்தையின் வளர்ச்சியை ஊக்குவித்தல்.